வியாழன், 12 ஜூன், 2025

உன்னிடம் சேர்வேன்

 உன்னோடு தானே உறவாடி நின்றேன் எங்கே தொலைந்தாய்

உதட்டின் ஓரத்தில் பூத்த புன்முறுவல் புதிரானது எப்படி
கண்ணுக்குள் ஒளிந்து கண்ணா மூச்சி விளையாட வந்தாயா
கனவுகள் கலையாமல் கற்பனை உலகிலே வலம் வருவாயா
மலைகளில் மணல் வெளியில் ஆற்றுப் படுகையில் தேடிவந்தேன்
மறைந்து விளையாடி மனதை மயக்கும் வித்தை உனதேயன்றோ
மறக்க முடியாத நினைவின் அலைகள் கரைகளில் இன்னமும்
ஒன்றா இரண்டா ஓராயிரம் காவியம் பாடலாம் உனக்காய்
இன்றோ நாளையோ இருப்பிடம் சொல்வாயா உன்னிடம் சேர்வேன்

கருத்துகள் இல்லை: