உன்னோடு தானே உறவாடி நின்றேன் எங்கே தொலைந்தாய்
உதட்டின் ஓரத்தில் பூத்த புன்முறுவல் புதிரானது எப்படி
கண்ணுக்குள் ஒளிந்து கண்ணா மூச்சி விளையாட வந்தாயா
கனவுகள் கலையாமல் கற்பனை உலகிலே வலம் வருவாயா
மலைகளில் மணல் வெளியில் ஆற்றுப் படுகையில் தேடிவந்தேன்
மறக்க முடியாத நினைவின் அலைகள் கரைகளில் இன்னமும்
ஒன்றா இரண்டா ஓராயிரம் காவியம் பாடலாம் உனக்காய்
இன்றோ நாளையோ இருப்பிடம் சொல்வாயா உன்னிடம் சேர்வேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக