நல்லவை நடக்க நாள் தோறும் தவமாம்
அல்லவை நடக்க அனு தினமும் உண்டாம்
நன்மைகள் வேண்டி நானும் நீயும் கெஞ்சுவோம்
தீமைகள் இலகுவாய் கொடி கட்டிப் பறக்கும்
எத்தனை படைத்தாய் இறைவா ஏனிந்த பேதங்கள்
வேதனை மனதில் தாங்கிய உள்ளங்கள் எத்தனை
போதனை செய்தே காலங்கள் ஓடின அன்றோ
கயவன் வாழ்வில் இன்பம் என்றும் உலகில்
கள்வன் கூட களித்தே வாழ்வதும் இங்கே
ஏனிந்த பேதங்கள் இறைவா மாற்றிடு விரைவில்
கனிவான மனங்கள் வளமுடன் வாழ்ந்திட அருள்செய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக