Bali, Indonesia
06/07/2024 & 07/07/2024
வழக்கம் போல காலை உணவுக்குப் பின் பஸ்கள் இரண்டும், அறைகளைக் காலி செய்து வந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு, வனகிரி hidden hills ல் உள்ள Twin lakeஐ அடைந்தன. மூன்றாயிருந்த ஏரி பல வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடித்து, அதிலிருந்து சிதறிய பாறைகளால் இரண்டாக மாறியதாகக் கூறப் பட்டது.
மலை உச்சியில் இருந்து வித விதமான போட்டோக்கள் ஜோடிகளும், சிங்கிள்ஸூம் எடுத்த பிறகு கீழிறங்கி, இரண்டாவது ஏரியில், பெரிய வட்டமடித்து கீழே இறங்கி அங்குள்ள Ulang Udang என்ற பெரிய தோட்டத்து அழகை ஒவ்வொரு இடமாய் கிளிக்கி, மதிய உணவும் அங்கேயே முடித்து,( இந்திய சைவ சாப்பாடு), நீண்ட பயணம் தொடர்ந்தது, தனோ லாட் கடற்கரைக் கோயிலை நோக்கி.
அங்குள்ள முதன்மைக் கோயில் பெரிய பாறையொன்றில் , அமைந்துள்ளது. High tide சமயங்களில் கடல் நீர் சூழ்ந்திருக்கும் சமயங்களில் அனுமதி இல்லை.
இன்று Low tide என்றாலும் பராமரிப்பு நடந்து கொண்டிருப்பதால், எங்கள் குழுவை அனுமதிக்கவில்லை. கடற்கரை நுழை வாயிலில்உள்ள கோயிலில் பூஜை முடித்து, கதிரவன் மறைவதைப் படமெடுத்த பிறகு கேசக் டான்ஸ் என்ற இராமாயணக் கதைச் சுருக்கம் நடனமாய் காலரி ஒன்றில் அமர்ந்து, ஒரு மணி அளவிலான, வாய்ச்சத்தமே இசையாய், சக்சக் என்ற சத்தத்துடன் நடந்தேறியது. கேசக் என்பதன் பெயர்க்காரணம் அதுவே, இசைக் கருவிகளே இல்லை. அன்றைய நாளும் இரவு உணவுடன், குட்டா ஆஸ்டன் ஓட்டல் தங்கும் விடுதியை அடைந்து, குளித்து அசதியில் உறங்கப் போயாயிற்று.
இன்று காலையில் எழுந்து, தயாராகி, ஏழாவது மாடி டெரஸ்ஸிலிருந்து பார்த்த போது மிக அருகில் கட்டிடங்கள் ஊடே கடல் தெரிந்தது. உபுட் போல் இல்லாமல், இது ஒரு நவீன சுற்றுலா நகரமாகவே மாறியிருந்தது.
காலை உணவுக்குப் பிறகு ,ஓட்டலுக்கு எதிரே உள்ள Spa ஒன்றில் கால்களுக்கு் மசாஜ் செய்த பிறகு, Benoah
கடற்கரைக்கு, கடலின் மீது கட்டப்பட்ட 4 கிமீ தூரப் பாலத்தில் பயணித்து, கடற்கரையை அடைந்து, படகுக்கு பத்துப் பேராய் பயணித்து , ஒரு தீவை அடைந்து, அங்குள்ள விலங்குகள் பண்ணையில் ஆமைகள், உடு்ம்பு, வெந்நிறக்கிளி, வௌவால் இவைகளுடன் போட்டோ எடுத்து முத்தாய்ப்பாக மலைப் பாம்பு ஒன்றை தோளில் போட்டு போட்டோ எடுத்த போது, ஒருவித பயங்கலந்த புதுமை உணர்வு.
மீண்டும் படகுப் பயணம், குழுவில் பாதிப் பேர் பாரா sailing சென்று வந்த நேரத்தில், சிலரைப் பற்றிய பழைய நினைவுகள் பரிமாறப் பட்டன்.வாழ்க்கையில் சோதனை என்பது் எப்படி எல்லாம் வரலாம் என்று புரிந்தது.
மதிய உணவு அதே கடற்கரை ஓரம், பானி பூரி, பாவ் பாஜி, மசால் தோசை் என புது விதமாய். சிறிய ஓய்வுக்குப் பிறகு , புறப்பட்டு, கிருஷ்ணா மார்க்கெட்டில் இறங்கி, அனைவரும் நினைவுப் பரிசுகளை வாங்கிய பிறகு, ஓட்டலை வந்தடைந்த்போது மணி நான்கைக் கடந்திருந்தது
நீச்சல் குளத்தில் இறங்க நேரம் கிடைத்ததால் , மற்றொரு நண்பருடன், சிறிது நேரம், நீச்சலிட்டு, மீணடும் அறைக்குத் திரும்பி தயாராகி இரவு உணவு முடித்துத் திரும்பிய போது, நாளை காலை ஏழு் மணிக்கே, பஸ் புறப்படும் மற்றொரு தீவுக்குச் செல்ல கப்பலைப் பிடிக்க என்ற அறிவிப்பு.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக