மனம் நோகுது மாற்றம் வருமோ என்று
சினம் கொள்ளுது சிலரது செயல் கண்டு
பெற்ற சுதந்திரம் பேணிக் காத்திட வழியெது
கற்ற கல்வி பயனற்றுப் போனது எதனால்
எத்தனை ஆண்டுகள் ஆயின பரங்கியர் சென்று
வேதனை பெண்கள் சிதைந்து ஊர்கள் தோறும்
மனிதர்கள் வாழும் நாடா என்றொரு கேள்வி
புனிதம் என்பது போனது எங்கோ தொலைந்து
ஊழல் எதிலும் உண்மை மறைந்து போனது
விழலுக்கு இறைத்த நீர் புல்லுக்கு மட்டுமே
சொல்வது ஒன்றாய் செய்வது வேறாய் ஏனோ
வெல்வது என்றோ கேளவிகள் ஆயிரம் மனதில்
நல்லவர் அல்லாத நாடாய் மாறிப் போனதே
நள்ளிரவில் பெற்ற சுதந்திரம் இருளில் இன்றும்
விடியல் என்பது வருமோ காலம் கடந்து
வினாக்கள் மட்டுமே விடைகள் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக