சிறகடித்துப் பறவையாய் சுற்றி வர ஆசை
உறங்கும் இடமே இயற்கை மடியில் மட்டுமே
வானமே கூரையாய் பசும்புல் வெளிப் படுக்கை
வாசல் என்பதே மலைத் தொடரின் அடிவாரம்
மான்களின் ஊடே விளையாட ஓட்டமாய் கால்கள்
இதுபோதும் இனியென்ன வேண்டும் எனக்கு
இதனோடு ஆற்று நீரும் கடல் மணலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக