யாரு செஞ்ச பாவமய்யா ஊரு தோறும் வெள்ளத்துலே
யாரோட சாபமிது மலை எல்லாம் சரியுது கூரையிலே
தேரு வந்த தெரு எல்லாம் தண்ணிக் காடாச்சு
தேடி வந்து ஊரு சுத்தி ஊழிக் காத்தோட
ஓடி ஒளிய ஓர் இடமும் இல்லை ஐயா
டிசம்பர் வந்தாலே நீயும் வந்து உயிரக். கொள்ளுவியோ
கசப்பா தோணுதே மழை வந்து மாய்க்கு துண்ணு
பயிரைக் காப்பாத்த வயிறு நிரப்ப வரச் சொன்னா
பயத்த கொடுத்து வாழ வழியத்து போக வச்சுட்டியே
இன்னும் வருதாம் இருண்ட கடல்லே இன்னொரு புயலு
இதுபோதும் அப்பனே இத்தோட நிறுத்து உன்னொட தாண்டவத்த !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக