சிந்தனை வறண்டு சிதறிய போது
வந்தது வரிகள் வார்த்தை வடிவில்
போனது வருமோ பேதமை அன்றோ
நானென்ற சொல்லே நலிந்து போனது
ஓடிய கால்கள் ஓய்ந்த நிலையில்
ஏனிந்த மாற்றம் என்றதோர் வினாவும்
கனிந்த பழமது கசிந்து போனது
சுழன்றது ஒன்றால் சுற்றம் மாறியது
உழன்ற வாழ்வில் ஞானம் உதித்தது
சென்றவர் வருவரோ கவிஞர் பாடினார்
சென்றது சேர்ந்த சேதியும் வந்தது
வட்டமும் சதுரமும் பாதைகள் ஆனது
வட்டியும் முதலுமாய் வாழ்க்கை ஆனது
அள்ளிய நீரைப் பருகிட ஆசைதான்
அத்தனை ஓட்டைகள் மறைந்து போனது
புரியாமலே கடந்த நாட்கள் அதிகம்
புதிரான வாழ்வே இன்றும் நாளையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக