வியாழன், 12 ஜூன், 2025

கருணை விழிகள்

 கருணை விழிகள்

வேலிகள் போட்டு விதைக்கச் சொன்னால்
வேதனை தானே தோன்றும் மனதில்
விதிகள் இல்லா காட்டாறு கவிதை
வரிகள் பலவும் வம்பு பேசும்
எதுகை மோனை அணி யாப்பு
எதனைத் தொட்டும் அறியா எழுத்துகள்
கண்ணில் தோன்றும் கனவுக் கோர்வை
விண்ணில் உலவும் வெண்மைப் பஞ்சுபோல்
வடிவம் அற்ற கோணல் ஓவியம்
படிக்க மட்டுமே பகுக்க அல்ல
தாயின் கருவில் தவழும் குழந்தை
வாயின் வழியே வார்த்தை சொல்லும்
தமிழே தாயென தத்துவம் பேசும்
தவிக்கும் மழலை மொழியாய்த் தோன்றும்
தேடிடும் ஓடிடும் தாவிடும் குதித்திடும்
தேடியே கருத்தினை உலகெலாம் சுற்றிடும்
வாடிய பயிருக்கு வாய்க்கால் நீராய்
வாகாய்ச் சொற்கள் வந்து வீழும்
தொடங்கிய பாதையை விட்டு விலகும்
அடங்காத ஆணவம் அவ்வப்போது தோன்றும்
சுதந்திர வேட்கை எட்டிப் பார்க்கும்
சுற்றுச் சூழலை கூர்ந்து நோக்கும்
சாதிகள் மதங்களை சாக்கடை என்றும்
சாத்திரம் பேசும் சண்டாளர் என்றும்
கூப்பாடு போடும் கூக்குரல் கேட்கும்
சமுதாயம் சாக்கடை .ஆவதை எதிர்க்கும்
சமாதானம் மட்டுமே சண்டைகள் எதற்கு
எல்லைகள் கடந்த நட்பைத் தேடும்
கருணை விழிகளில் மட்டுமே அல்ல
கருத்தில் இதயத்தில் எங்கும் உறைந்திட
வேண்டியே நிற்கும் வேதனை கொள்ளும்
வேற்றுமை அற்றதே மனிதம் என்பதை
மீண்டும் சொல்லும் அழுத்திச் சொல்லும்
வேண்டும் அமைதி பாரினில் என்றும் !
விசயன்
Watch between 22.10 and 26.50 mins
May be an image of tree and fog
All reactions:
Bethany Webster

கருத்துகள் இல்லை: