கருணை விழிகள்
வேலிகள் போட்டு விதைக்கச் சொன்னால்
வேதனை தானே தோன்றும் மனதில்
விதிகள் இல்லா காட்டாறு கவிதை
எதுகை மோனை அணி யாப்பு
எதனைத் தொட்டும் அறியா எழுத்துகள்
கண்ணில் தோன்றும் கனவுக் கோர்வை
விண்ணில் உலவும் வெண்மைப் பஞ்சுபோல்
வடிவம் அற்ற கோணல் ஓவியம்
படிக்க மட்டுமே பகுக்க அல்ல
தாயின் கருவில் தவழும் குழந்தை
வாயின் வழியே வார்த்தை சொல்லும்
தமிழே தாயென தத்துவம் பேசும்
தவிக்கும் மழலை மொழியாய்த் தோன்றும்
தேடிடும் ஓடிடும் தாவிடும் குதித்திடும்
தேடியே கருத்தினை உலகெலாம் சுற்றிடும்
வாடிய பயிருக்கு வாய்க்கால் நீராய்
வாகாய்ச் சொற்கள் வந்து வீழும்
தொடங்கிய பாதையை விட்டு விலகும்
அடங்காத ஆணவம் அவ்வப்போது தோன்றும்
சுதந்திர வேட்கை எட்டிப் பார்க்கும்
சுற்றுச் சூழலை கூர்ந்து நோக்கும்
சாதிகள் மதங்களை சாக்கடை என்றும்
சாத்திரம் பேசும் சண்டாளர் என்றும்
கூப்பாடு போடும் கூக்குரல் கேட்கும்
சமுதாயம் சாக்கடை .ஆவதை எதிர்க்கும்
சமாதானம் மட்டுமே சண்டைகள் எதற்கு
எல்லைகள் கடந்த நட்பைத் தேடும்
கருணை விழிகளில் மட்டுமே அல்ல
கருத்தில் இதயத்தில் எங்கும் உறைந்திட
வேண்டியே நிற்கும் வேதனை கொள்ளும்
வேற்றுமை அற்றதே மனிதம் என்பதை
மீண்டும் சொல்லும் அழுத்திச் சொல்லும்
வேண்டும் அமைதி பாரினில் என்றும் !
விசயன்
Watch between 22.10 and 26.50 mins
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக