கடலின் அலைகள் போன்றே மனதின் எண்ணங்கள்
உடலின் உயிரின் அணுக்கள் தோறும் குவிந்தே
ஆயிரம் ஆயிரம் காட்சிகள் திரையில் ஓடும்
உயிலாய் வாழ்ந்த வாழ்க்கைப் பத்திரம் எனலாம்
நல்லவை தீயவை கோபம் கொஞ்சல் எத்தனையோ
அன்றொரு நாளென்று நூறாறு கதைகள் சொல்லும்
இன்றோடு முடியாது என்றுமே தொடரும் நாவலாய்
குட்டிப் பயலாய் தோன்றி குடுகுடு கிழவனாய்
சுட்டிப் பெண்ணாய் சுமைதாங்கித் தாயாய் கிழவியாய்
வாழ்க்கை என்பதே வருடங்கள் எழுதும் காவியம்
வீழ்ந்தும் எழுந்தும் வளைந்தும் நெளிந்தும் தொடரும்
அசைபோடும் நாட்களில் வாலிபம் மறைந்த வயோதிகம்
இசையாகக் காதுகளில் இன்னிசை ராகமாய் ஒலிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக