அயலகப் பயணம் , சிங்கப்பூர் & தாய்லாந்து, 7/11/24, தொடர்ச்சி
காலை நண்பர் அலுவலக மீட்டிங் இருந்ததால், பொட்டானிகல் கார்டனுக்கு MRT ஏறி, வாசலில் இறங்கி, மிகப் பெரிய பசுமைத் தோட்டத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்த போது மழைத் தூறல் விழ ஆரம்பித்தது. சிறிது நேரத்திலேயே நி்ன்றும் போனது. விசிறிப் பனை, விசிறி வாழை, நெடிதோங்கிய பழமையான மரங்கள் என காடுகள் போல். ஊடே புல் வெளி, தாமரைத் தடாகம் எனப் பலவும். நண்பர் பயணத்துக்கென சார்ஜ் செய்யப்பட்ட கார்ட் கொடுத்திருந்தார். பஸ், MRT இரண்டுக்கும் பொதுவானது.
நடந்து, ஓய்வெடுத்து கால்கள் கெஞ்ச ஆரம்பித்தன, போதும் நடந்த்து என. ஆங்காங்கே போட்டோக்கள் கிளிக்கி, பசுமை மரங்களும்,்செயற்கை அருவியும் கண்டு களித்து, மீண்டும் வீட்டிற்குத் திரும்பி மதிய உணவிற்குப் பிறகு, ஓய்வெடுத்து போது நண்பர் சாம் அலுவலகத்திலிருந்து திரும்பினார் எங்கு போவது என்று விவாதித்து, மெர்லியான் பார்க் போவதென முடிவானது. இம்முறை பேருந்தில். மாடியில் உட்கார்ந்து, உயரமான கட்டிடங்கள் அழகை இரசித்தபடி இருவரும் பயணித்தோம்.
மெர்லியான் அடைந்த போது நதியும், அழகான கரையோரத் தோற்றமும் மனதைக் கொள்ளை கொண்டது. பல வித கோணங்களில் போட்டோக்கள் எடுத்த பிறகு, ஆற்றில் படகுச் சவாரி செய்ய டிக்கெட் எடுத்து, அமர்ந்து இருபது நிமிடங்கள், இருள் மங்கிய இரவின் ஆரம்பத்தில் சொர்க்கமொன்று விரிந்தது. ஒவ்வொரு இடம் கடக்கும் போது அவ்விடத்தின் வரலாறு வீடியோ திரையில் ஒளிபரப்பப் பட்டது. நல்லதொரு படகுப் பயணம்.
இப்போது இரவு உணவுக்கு அன்னலஷ்மி ரெஸ்டாரெண்ட் போவதென முடிவெடுத்து, அடைந்து, பஃபே முறை தமிழ்நாட்டு ருசியில் தட்டிலிட்டு் சாப்பிட்ட போது அருமையான சுவை. இதில் இன்னொரு தகவல் என்னவெனில், விலை ஏதும் குறிக்கப்படாதது தான். சாப்பிட்டு அவரவர் விருப்பப் படி கொடுத்துச் செல்கின்றனர். விருந்தோம்பல் பலமாய், விருந்தினர் வீடு போல.
மீண்டும் பேருந்தில் பயணித்து, வீட்டை அடைந்த போது, கால்களின் ஒவ்வொரு் எலும்பு, தசை வலி மிகுந்தது. மறுநாள் காலையில் சைனா டவுன் செல்வதாக முடிவெடுத்து, உறங்க ஆரம்பித்தபோதும் நடக்க வேண்டிய தூரம் மனதில் நின்றது. சைனா டவுன் மாரியம்மனே துணை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக