இலக்கணம் பற்றாத கவிதை
இலக்கு ஒன்றே மனதில்
மனதின் வெளிப்பாடு மட்டும்
தினமும் நிரைநேர் இல்லை
கலிப்பா வெண்பாவும் இல்லை
பட்டதைச் சொல்ல மட்டும்
கெட்டவை சாடுதல் உண்டு
காதலைக் கற்பனை செய்ய
வாதங்கள் செய்தலும் உண்டு
அணியும் அனிச்சம் இங்கே
பணியும் சொற்கள் சிதறும்
இயற்கை உலாவும் ஊடே
இறைவனும் வந்து போவான்
நட்பு நடுவே நடக்கும்
நகைப்பு சிலநேரம் உதிரும்
சினந்து சிதறவும் செய்யும்
இனம் கண்டு கொள்ளும்
தொடரும் படைப்பை என்றும்
தொல்லை என எண்ணாதீர் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக