இது சோகத்திற்கு அல்ல நினைவு கூர்வதற்கு ( அன்னை இறந்த நாள், ஏப்ரல் ஒன்று , 1974)
கொட்டிய தேளின் நஞ்சாய் கலந்த வாழ்க்கை
எட்டிய படியே பார்த்த சிறுவனாய் நானன்று
புன்னகைத்த உன்முகம் கண்ட தில்லை கண்களால்
காசுதர மறுத்ததால் இலை தைத்து விற்றதுவும்
காலணா அரையணா முருங்கைக் காய் வி்ற்றும்
வெற்றிலையை விட்டதே இல்லை தானே என்றும்.
சுற்றமும் நட்பும் உனைக் காத்த போதும்
புத்தி பேதலித்தாய் புரியாத செயல்களும் கூடவே
கத்திப் பேசியது் சுவர்களின் காதுகளுக் குள்ளே
உமது மாத்திரைகள் இனிப்பாய் எண்ணி விழுங்கி
எமது உறக்கத்தை நாட்களாய் மாற்றிய விந்தை
சுகப் பட.டாயா வாழ்வில் என்றொரு கேள்வியுண்டு
சுற்றிய வாழ்வின் இலக்கணம் புரிவதற்குள் சென்றாயே
ஆண்டுகள் நாற்பத்தைந்து மேலானாலும் மறவாத
ஆசையாய் வளர்த்த செல்லப் பிள்ளைகள் நாங்கள்
கடவுளைக் கண்டதில்லை ஆனால் உன்னைக் கண்டோம்
கடக்கின்ற நாட்கள் யாவும் உன் நினைவோடே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக