புரியாத புதிருக்கு விடை தேடிப் போனேன்
சரியான பதிலுக்கு வினாவும் தேடினேன்
கரியோடு சாம்பலும் கலந்தே கண்டேன்
பரியேறி வலம் செல்ல எண்ணினேன்
திரியோடு எண்ணெயும் சேர்ந்தே ஒளிர்ந்தது
எரியாத தீயிலே எங்கே நெருப்பு
தெரியாத ஒன்றை தெளிந்து நோக்கினேன்
அரியோ சிவனோ அய்யனோ அறியேன்
அறியாமை போக்கிட அருள்வாயோ நீயே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக