திங்கள், 31 அக்டோபர், 2022

வெப்பம் தாளாது

 வெயிலோனே தினமும் சுட்டெரிப் பதேனோ

வெப்பம் தாளாது வேதனை மாளாது
வியர்வைத் துளிகள் உழைக்காமலே இப்போது
அயர்வைத் தருவதும் அதுவே தினமும்
மழையொன்று வருமோ மனம் குளிருமோ
பிழையென்ன செய்தோம் சொல்வாயே ஆதவா
அக்னி என்று ஒன்றும் வருமாம்
அனல் காற்றில் அங்கமெலாம் சுடுமாம்
வைகாசி போனாலே ஓய்வதற்கு வழியோ
ஆகாது இத்தனை வன்மம் எம்மீது
வருணனை சிறிதே வந்து போகச்சொல்
கருணை காட்டு கருகிப் போவதற்குள்

கருத்துகள் இல்லை: