திங்கள், 31 அக்டோபர், 2022

தூக்கமே

 நீ ரொம்ப மோசம் , சொல்லிட்டு தான் படுத்தேன். நாளைக்கு ஞாயித்துக் கிழமைனு சொன்னப்ப நள்ளிரவு கடந்து இருந்துச்சு. லேட்டாதான் எழுந்துக்கனும்னு சொன்னேனா இல்லையா அப்புறம் ஏன் காலைலே ஆறு மணிக்கு முன்னாடி எழுப்புனே.

முன்னுக்குப் பின் முரணாவே பண்ணிட்டே இருக்கே. அப்புறம் எப்படி நண்பனா நான் ஏத்துக்க முடியும். தினந்தினம் சொல்லிட்டே இருக்கேன். பேச்சைக் கேக்கவே மாட்டே. சீக்கிரமா படுத்தாலும் வர மாட்டேன்னு அடம். லேட்டா தூங்கறமே லேட்டா எழுந்துக்கறேனு சொல்லிட்டே படுத்தாலும் இப்படி எழுப்பி விட்டு் வேடிக்கை பாக்கறே.
நான் என்ன வரதா மாதிரி மெரினா வாக்கோ, இராஜேந்திரன் மாதிரி யோகாவா பண்ண போறேன். பாடா படுத்தாதே. கருணை காட்டு தூக்கமே, தினமும் உன்னோட மல்லு கட்டி ஓஞ்சு போய்ட்டேன்.

கருத்துகள் இல்லை: