திங்கள், 31 அக்டோபர், 2022

வாவா நண்பா

 வாவா நண்பா உலகைச் சுற்றிப் பார்

வாலிபம் போனால் என்ன வாழ வழியுண்டு
வண்ணக் கனவுகள் தினம் தினம் உன்னிடம்
எண்ணம் ஒன்று சேர் எடுத்திடு முடிவினை
கற்பனை மட்டுமல்ல கனவுகள் நினைவுகளாய் விரியும்
கற்கவும் கேட்கவும் காணவும் எத்தனை உலகினுள்
பரந்து விரிந்தது பாரதம் மட்டுமல்ல பாரும்
பயணிக்கத் துவங்கு பாதைகள் புரியும் விரியும்
இயற்கை என்பதே இறைவன் அளித்த வரம்
இருக்கும் நாட்களை இன்பமாய்க் கழிக்க விரைந்திடு
நாளை என்பது யாருக்கும் தெரியாத புதிர்
வேளை இதுவென்று புறப்படு தோழா இன்றே
மனதினில் மகிழ்வும் தீர்வும் கொண்டு புறப்படு
மயக்கும் காட்சிகள் காணக் கிடைக்கும் எங்கும்
உன்னில் தொடங்கும் உன்னில் முடியும் தொடர்கதை
உறக்கம் கலைத்திடு உற்சாகம் கொள் உவந்திடு !

கருத்துகள் இல்லை: