திங்கள், 31 அக்டோபர், 2022

வருவாயா மீண்டும்

 எட்ட நின்று பார்த்த கண்கள்

கிட்ட வராமலே பேசிய உதடுகள்
வட்ட நிலவாய் ஒளிர்ந்த முகம்
ஏட்டீ பெண்ணே எங்கே போனாய்
சொட்டச் சொட்ட நனைந்த நாட்கள்
ஒட்டியே உன்னுடன் அமர்ந்த வரப்புகள்
சோளக் கதிரை உதிர்த்த கரங்கள்
சோற்றுப் புதையலில் தோய்ந்த விரல்கள்
காற்று வீசிய தாவணி மாலைகள்
நேற்றுப் போலவே மனதில் காட்சியாய்
பாட்டுப் பாடியே மயக்கிய மங்கையே
வீட்டுப் படியிலே விழிகள் சிமிட்டி
காட்டு வழியில் தொட்ட தருணங்கள்
விட்டுப் போகுமா மனதைத் துறந்து
கற்பனை உலகிலே எத்தனை நாட்கள்
கடந்தே போனது வாலிப வயது
என்றோ போனநீ எங்கே போனாயோ
இன்றோ நாளையோ வருவாய் எண்ணி
காலம் போனது கனவுகள் போலவே
காற்றில் கலந்த நினைவுகள் மறைந்தன
வருவதும் போவதும் வாழ்வின் வாடிக்கை
வருவாயா மீண்டும் என்பது வேடிக்கை

கருத்துகள் இல்லை: