சொல்லும் செயலும் ஒன்றாகவும்
சொல்லாமலே செய்யும் வலிமையும்
கல்லாமல் பகுத்தறிவு நிறைந்தும்
கடமையாற்றல் நிறைந்த தலைமையும்
உயரிய நற்பண்பு உடைத்தும்
காசுக்காக விலைபோகா நிலையும்
மாசற்ற மனமும் மாண்பும்
வளமாய் மாற்றிட வரைவும்
வளையாத செருக்கும் நேர்மையும்
கொள்கையில் குறையில்லா நோக்கும்
கொண்டிருந்த தலைமைப் பெருந்தலைவர்
இன்றில்லை என்றொரு வருத்தம்
இவரைப்போல் இன்னொருவர் வருவரோ
கேள்விகள் மனதில் தினமும்
கேளிக்கை ஆகிற்று அனைத்தும்
மாற்றம் வேண்டுமென ஏக்கம்
மாறிடும் காலத்திற்கு தவமாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக