கூடு விட்டு ஆவி போகு முன்னே ஏனோ இந்த நாடகம் மானிடா
கூடு கட்டி வாழும் பறவைக் கூட்டம் கூடித் திரியும் விலங்கினங்கள் வனமதிலே
ஏடு பல கற்றும் ஏனோ மனிதா உன் புத்தி மட்டும் மாறலியே
பாடு பட்டு சேத்த நட்பை பத்திரமா பாத்துக்க போனது என்றும் திரும்பாது
காடு சேரும் நாளும் அருகே தான் கசப்பு மட்டும் ஏனோ இன்னும்
நாடு விட்டு நாடு வந்து நல்லதை கத்து கிட்டு கூடித்தானே வாழ்ந்தோம்
விடு விட்டு விடு கசடுகள் வேணாம் மனசு சுத்தமா இருக்க விடு
கடு கடுத்த வாழ்க்கை காசுக்கும் ஆகாது கவலை எதுக்கு மனசுலே அகற்று
சிடு சிடுப்பு விட்டு சிரிப்ப வச்சுக்க சிந்தனை மாத்து மனசு மகிழும்
நெடு நெடுங் காலம் வாழ்ந்த வாழ்வை நினைச்சுப் பார் உண்மை புரியும்
வடு எதுவும் வேணாம் வாழும் சில காலம் மனசு கோணாம இருப்போம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக