திங்கள், 31 அக்டோபர், 2022

பறவை எல்லாம் ஒண்ணு சேந்துச்சு

 கூடு விட்டு பறவை எல்லாம் ஒண்ணு சேந்துச்சு

கூக்கூலே ஏறி ஊரு விட்டு ஊரு சேந்துச்சு
காடு மேடு எல்லாமும் சுத்தி வலம் வந்துச்சு
கோடு போட்டா ரோடு போட்டு ஆட்டம் போட்டுச்சு
படகு ஏறி பவனி வந்து பக்கோடா தின்னுச்சு
படிலே ஏறி படுத்த கடவுள வணங்கி நின்னுச்சு
ராத்திரிலே கலரு தண்ணி கலக்கி உள்ளே தள்ளுச்சு
வத்திய பத்த வச்சு புகைய வெளியே விட்டுச்சு
கொட்டுற அருவியிலே குளிச்சு குதிச்சு கும்மாளம் போட்டுச்சு
பாட்டுப் பாடி போட்டோ பிடிச்சு ஊஞ்சல் ஆடுச்சு
வகை வகையா தட்டுலே வச்சு ருசிச்சு தின்னுச்சு
வைகறைலே ஏரிக் கரைலே நடந்து பழகிப் பாத்துச்சு
காலையிலே நீச்சல் குளத்துலே நடந்து ஆழம் பாத்துச்சு
கைபேசிலே விதம் விதமாக படம் எடுத்து அனுப்புச்சு
கைகோத்து பறந்து வந்து மீண்டும் கூடு சேந்துச்சு
( கன்யாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் 26/8 - 28/8)

கருத்துகள் இல்லை: