என்னுளே உறைந்து நின்று
என்றுமே காத்து நிற்கும்
தாயெனும் தெய்வம் போற்றி
சேயெனைத் தோளில் சுமந்து
ஊரெலாம் பவனி வந்த
கல்வியைக் கற்பித்த ஆசான்
காலமெலாம் கூடவே வரும்
நட்பு சுற்றம் தோழமை
மனையாள் மக்கள் சோதரர்
எனையாளும் இறைவன் இயற்கை
அனைத்தும் ஒருசேரப் போற்றி
வாழ்விலே ஒளி சேர்த்த
உத்தமர் தமைப் போற்றி
ஆண்டுகள் பல கடந்து
நோயற்ற வாழ்வே போற்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக