பால்ய சினேகிதம் பழகிய பல நாட்கள்
கால்கள் கழுவி களித்த மாலை நேரங்கள்
நடப்பதே கடினமாய் மண்ணில் புதைந்து கரைசேர
நடந்த கதைகள் பலவும் பேசிய இரவுகள்
நிலாச் சோறு உண்ண குழுமிய குடும்பங்கள்
குடை பிடித்து சுடும் வெயிலில் காதலர்கள்
வடை சுட்டு வாழ்வை நடத்தும் பெண்டிர்
மர நிழலில் கனாக் காணும் வாலிபர்கள்
மங்கையர் மழலை மனிதக் கடலாய் கூட்டம்
உடலோடு உரசி உலகை மறந்த காளையர்
கடலோசை கேட்பதே கானமென ஒரு சிலரும்
சுண்டல் முறுக்கு சுமந்த சிறுவர் குரலும்
கிண்டல் செய்தே நேரம் போக்கும் வாலிபரும்
அறிஞர் ஆன்றோர் சிலைகள் அணி வகுத்தும்
மீளாத் துயிலில் உறங்கும் தலைவர் சிலரும்
அழகிய மெரினா கடற்கரையே நினைவில் என்றும்நீ
அலையோசை கேட்டே ஆயிற்று மாதங்கள் பல
உன்னைப் பிரிந்து வாடும் உள்ளம் சொல்கிறது
உறவாட விரைவில் வருவேன் காத்திரு அதுவரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக