திங்கள், 31 அக்டோபர், 2022

இயற்கைப் பெண்ணே

 எனக்கொரு அழகிய காதலி இருக்கின்றாள்

தனக்கென வாழாத தியாக மனம்
பசுமை உள்ளம் பரந்த மனது
பகைமை பாராட்டா உயர்ந்த பெண்மை
எங்கே சென்றாலும் என்னோடு அவளும்
ஏங்க வைத்து தள்ளிப் போவாள்
மழைநீர் என்றால் மட்டற்ற மகிழ்ச்சி
மழலை போன்றே நனைந்து கொண்டாட்டம்
சிகரங்கள் தோறும் பயணித்து வருவாள்
சில்லென்ற காற்றில் சிலிர்த்துப் போவாள்
பனிக்கட்டி என்றாலே பயந்து போவாள்
தனியே தூரநின்று இரசிப்பது மட்டுமே
கனவிலே கண்களில் மறையாது நிற்பாள்
கன்னியவள் இன்றி வாழ்தலே அரிது
இயற்கைப் பெண்ணே இன்றும் உன்னுடன்
இணைந்து அமர்ந்து கவிபாடி மகிழ்ந்தேன்

கருத்துகள் இல்லை: