திங்கள், 31 அக்டோபர், 2022

தினமொரு கவிதை

 தினமொரு கவிதை திகட்டாத தமிழில்

தினமொரு சித்திரம் கண்களுக்கு விருந்தாய்
எனக்கொரு கேள்வி எழுப்பிய கவிஞர்
தனக்கொரு பாணியைக் கொள்ளும் நண்பர்
வனப்பான வாலிபம் மறைந்த வருத்தம்
சினங்கொள ஏதுமிலை நட்பின் வலிமையில்
கனமென இருந்தும் கசப்பிலா வாழ்க்கை
கலகல சிரிப்பும் கவலையற்ற மனமும்
எனக்கென எத்தனை மனித நட்புகள்
தனக்கென வாழாத தகைசால் தலைமைகள்
வனப்பும் வளமையும் வாலிப முறுக்கு
வயதானாலும் வாடாத உள்ளச் செருக்கு
வட்டப் பாதையில் சுற்றும் கோள்கள்
எட்டாத தூரத்தே ஒளிரும் கதிரோன்
வானம் வசப்படுமா வாழ்வில் ஒளிதர

கருத்துகள் இல்லை: