திங்கள், 31 அக்டோபர், 2022

மனிதம் பழகிடு

 காலமுண்டு நண்பா கடந்து செல்

ஞாலமுழுதும் நமதே உணர்ந்து கொள்
வாதமெதற்கு பெரிதோ சிறிதோ என்று
வாழவந்தோம் மகிழ்ந்தே நலமுடன் உலகில்
வர்ணங்கள் களைவோம் வெண்மை தூய்மையாகும்
இறைவனை இயற்கையைப் போற்றி வணங்குவோம்
சிறையென மனதில் சிந்தனை எதற்கு
கறுப்போ சிவப்போ கருகிடும் நெருப்பில்
வெறுப்பு மனதில் வேதனை தந்திடும்
மனிதம் பழகிடு மகிழ்வு பெருகும்
மற்றதை விலக்கு விலங்காய் மாறாதே

கருத்துகள் இல்லை: