காலமுண்டு நண்பா கடந்து செல்
ஞாலமுழுதும் நமதே உணர்ந்து கொள்
வாதமெதற்கு பெரிதோ சிறிதோ என்று
வாழவந்தோம் மகிழ்ந்தே நலமுடன் உலகில்
வர்ணங்கள் களைவோம் வெண்மை தூய்மையாகும்
சிறையென மனதில் சிந்தனை எதற்கு
கறுப்போ சிவப்போ கருகிடும் நெருப்பில்
வெறுப்பு மனதில் வேதனை தந்திடும்
மனிதம் பழகிடு மகிழ்வு பெருகும்
மற்றதை விலக்கு விலங்காய் மாறாதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக