கள்ளழகர் ஆற்றில் இறங்கி இளைப்பார
உள்ளமெலாம் உவகையுடன் மக்கள் வெள்ளம்
சித்திரை முழுநிலவில் முகம் சிரிக்க
நித்திரை மறந்து நிலவொளியில் உன்னுடன்
கடந்த காலக் கதைகள் பலவும்
மணலில் கைவிரல்கள் நுழைந்து விளையாட
மனதில் காட்சிகள் திரையினில் தோன்ற
எத்தனை இனிமை எண்ணற்ற கனவுகள்
பித்தனாய் சிலநேரம் பிரிவுகள் எண்ணி
சத்தமாய் சிரித்த ஆனந்த நினைவுகள்
சந்தங்கள் அமைய பாடிய பாடல்கள்
காலம்தான் உருண்டோடி கால்கள் தடுமாறி
காவியமாய் கண்முன்னே இன்றும் முழுநிலவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக