திங்கள், 31 அக்டோபர், 2022

கடந்த காலக் கதைகள்

 கள்ளழகர் ஆற்றில் இறங்கி இளைப்பார

உள்ளமெலாம் உவகையுடன் மக்கள் வெள்ளம்
சித்திரை முழுநிலவில் முகம் சிரிக்க
நித்திரை மறந்து நிலவொளியில் உன்னுடன்
கடந்த காலக் கதைகள் பலவும்
நடந்த நாட்கள் எண்ணி நகைத்து
மணலில் கைவிரல்கள் நுழைந்து விளையாட
மனதில் காட்சிகள் திரையினில் தோன்ற
எத்தனை இனிமை எண்ணற்ற கனவுகள்
பித்தனாய் சிலநேரம் பிரிவுகள் எண்ணி
சத்தமாய் சிரித்த ஆனந்த நினைவுகள்
சந்தங்கள் அமைய பாடிய பாடல்கள்
காலம்தான் உருண்டோடி கால்கள் தடுமாறி
காவியமாய் கண்முன்னே இன்றும் முழுநிலவே

கருத்துகள் இல்லை: