திங்கள், 31 அக்டோபர், 2022

கவிதையாறு

 கவிதையாறு காட்டாற்று வெள்ளமாய் உருண்டோடி

கடல் சேருமுன்னே கரை அகண்டு
வயல் சேரந்து பசுமை விதைத்து
வளைந்து நெளிந்து பலகாதம் கடந்து
குளித்தும் குடித்தும் குளிர்ந்தும் களித்தும்
குதூகலிக்க வைத்தும் நளினம் அழகே
இடை சிறுத்தும் இதரவை பெருத்தும்
எடை குறைத்தும் எத்தனை அழகு
நதிமகள் நடனம் நாளதும் கண்டு
நலமுடன் இருப்போம் நண்பரே வாருமின் !

கருத்துகள் இல்லை: