கனவுகள் மெய்ப்பட வேண்டும்
கவலைகள் மறைந்திட வேண்டும்
ஒற்றுமை ஓங்கிட வேண்டும்
நற்றமிழ் போற்றிட வேண்டும்
நல்லவை பெருகிட வேண்டும்
நானிலம் செழித்திட வேண்டும்
தலைமைகள் நிறைந்திட வேண்டும்
தாயகம் உயர்ந்திட வேண்டும்
வாய்மையே வென்றிட வேண்டும்
வறியவர் இல்லாமை வேண்டும்
வர்ணங்கள் பிரியாமை வேண்டும்
சொல்வதைச் செய்திடல் வேண்டும்
பல்வகை வளங்கள் வேண்டும்
பாரினில் உயர்ந்திட வேண்டும்
பாரதம் என்றதோர் நாடு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக