திங்கள், 31 அக்டோபர், 2022

ஊடகங்கள்

 8/9/22

காலை ஒன்பது JP Nagar 7th Phase புறப்பட்டு 23 kms தூரத்தில் உள்ள RT Nagar பெயர்சூட்டு விழா ஒன்றுக்குச் செல்ல வேண்டும். நகரை முழுமையாகக் கடந்து செல்ல வேண்டும்.
ஊடகங்களின் பயமுறுத்தல் வீடியோக்கள் மனத்திரையில். ஜெயநகர் கடந்து போர்வைக்குள் அடங்கிய பிள்ளையார் சிலைகள் JC Road கடந்து, டவுன்ஹாலும் கடந்து மகாராணி காலேஜ் அருகில் முதல் சுரங்கப்பாதை கடந்த போது ஒரு சொட்டு நீரும் இல்லை. டிராபிக் மிதமாக இருந்தது.
வின்ட்ஸர் மேனர் சுரங்கப்பாதை, மேக்ரி சர்க்கிள் சுரங்கப்பாதை என எங்குமே நீர்த்தேக்கம் இல்லை.
இரண்டு அல்லது மூன்று இடங்கள் ஏரிகளின் அருகில் நீர் வடிகால் சரிவர அமையாத இடங்கள் மட்டுமே வெள்ளம் ஏற்பட்டது. பொதுவாக பெங்களூரில் மழைநீர் தேங்குவதில்லை. மொத்த நகரின் பரப்பில் பத்து சதவீதம் கூட வெள்ளம் இல்லை. அதுவும் திட்டமிடாத கட்டிடங்கள். 1973 லிருந்து நகரின் வளர்ச்சியைப் பார்த்தவன் என்பதால் நகரின் வெளிப்புற தாறுமாறான வளர்ச்சியே இது போன்ற நீர்த்தேக்கத்திற்கு காரணம் என்பது தெளிவு. இது எல்லா பெரு நகரங்களுக்கும் பொருந்தும்.
ஊடகங்கள் உண்மைச் செய்திகளைப் போடுவதை விட மக்கள் மனதில் பயமுறுத்தும் செய்திகளைப் பரப்பி TRP ரேட்டிங் உயர்த்தவே பாடுபடுகிறார்கள்.
9/9/22
6 10am
Intercity Exp to Kovai

கருத்துகள் இல்லை: