கவிதை எழுத வேணுமாம் தினமும்
கவிஞர் சொல்லி வைத்தார் வைதார்
கருத்துத் தேடி அலைந்த மனது
களைத்துப் போகவில்லை களம் தேடி
விடிந்த போது விடியல் தேடியது
பாடிய வறுமை தொடர்ந்தே இன்றும்
வாடிய முகங்கள் வாழ்வதும் உண்டு
மாற்றம் ஏனோ வருவதே இல்லை
இல்லாத நிலையே இல்லாமை வேண்டும்
கல்லாத சிறுவர் கற்றலும் வேண்டும்
எத்தனை ஆண்டுகள் தேவையோ
எழுந்த சிந்தனை விடை தேடியே
மாற்றம் ஒன்றே மாறாதது என்றால்
மாறிடுமோ இவர்தம் வாழ்வும் ஒருநாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக