திங்கள், 31 அக்டோபர், 2022

ஒருவனே தேவன்

 இயற்கையைப் பாடுவோம் நல்லது அதுவே

செயற்கை உலகில் வேண்டும் அமைதி
இனியவை மட்டுமே மனதில் தேவை
இகழ்வதை ஏனோ மனிதன் தேடினான்
கடவுளர் யாவரும் நல்லதே சொன்னார்
கற்றவர் கருத்தும் அதுவே ஆனது
மாற்றம் நல்லதே நன்மை பயப்பின்
மாற்றுக் கருத்தை மதிப்போம் சகிப்போம்
கூற்றுவன் வருங்கால் கூடாகும் உடலே
கூக்குரல் விடுப்போம் நல்ல மாறுதலெனில்
நல்லதே நினைப்பின் நல்லதே நடக்கும்
பொல்லாத சொற்கள் புதைத்து விடுவோம்
ஒற்றுமை என்பதை உரக்கச் சொல்வோம்
ஒருவனே தேவன் என்பதை ஏற்போம் !

கருத்துகள் இல்லை: