இயற்கையைப் பாடுவோம் நல்லது அதுவே
செயற்கை உலகில் வேண்டும் அமைதி
இனியவை மட்டுமே மனதில் தேவை
இகழ்வதை ஏனோ மனிதன் தேடினான்
கடவுளர் யாவரும் நல்லதே சொன்னார்
மாற்றம் நல்லதே நன்மை பயப்பின்
மாற்றுக் கருத்தை மதிப்போம் சகிப்போம்
கூற்றுவன் வருங்கால் கூடாகும் உடலே
கூக்குரல் விடுப்போம் நல்ல மாறுதலெனில்
நல்லதே நினைப்பின் நல்லதே நடக்கும்
பொல்லாத சொற்கள் புதைத்து விடுவோம்
ஒற்றுமை என்பதை உரக்கச் சொல்வோம்
ஒருவனே தேவன் என்பதை ஏற்போம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக