திங்கள், 31 அக்டோபர், 2022

தீபஒளித் திருநாளாம்

 விளக்குகள் ஒளியேற்ற தெருவெங்கும் ஒளிவெள்ளம்

விடலைப் பிள்ளைகள் ஓவென்ற கூச்சல்
இருள் விலகி இதயங்கள் மகிழ்ச்சி
கருக்கல் குளியல் கடவுளைத் தொழுது
எல்லோரும் சேர்ந்து ஏற்றிய தீபங்கள்
எண்ணைய்த் திரியுடன் ஒளிர்விடும் அழகு
அதிரசம் முறுக்கு அடுக்காய் அடுக்கில்
புதியதாய் இனிப்புகள் பலவும் பெட்டியில்
ஆரவாரம் வானைப் பிளந்து பரவிட
குரலோசை குதூகலம் கும்மாளம் கொண்டாட்டம்
தீபஒளித் திருநாளாம் ஊரெங்கும் உற்சாகம்
தீயவை அழிந்து நன்மைகள் பெருகட்டும்

கருத்துகள் இல்லை: