வேடிக்கை தான் வாடிக்கை ஆனதுவோ
பாடித்தான் போனவனே பதுங்கிய கதையுண்டே
பேசுவதும் செய்வதும் வேறானால் என்செய்ய
பேதைகளாய் மாறியதும் யார்செய்த தவறோ
புத்தி கெட்டுப் போச்சுதே படித்தோர்க்கும்
தர்ம சிந்தனைகள் மறைந்தே போனதுவோ
கர்ம வீரரைப் போல் வருவாரோ
விளக்கிலே மடியும் விட்டில் பூச்சிகளே
விளங்கலியோ தவறான உம் செயல்கள்
மக்களை மறந்த மன்னன் மாடியிலே
மக்காய் படித்தவனும் மாறிய கொடுமை
காலம் மாறியதே கேட்பாரே இல்லாமல்
காற்று திசைமாறி புயலாய் மாறிடுமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக