திங்கள், 31 அக்டோபர், 2022

உத்தமர் காந்தி

 எதையும் மறக்கும் மனிதர்

இதையும் மறந்து விடுவரோ
கதைகள் பலவும் பேசியே
பதைக்க வைக்கும் சிலரே
உத்தமர் காந்தி புகழை
பித்தன் போலவே மறப்பரோ
கத்தியின்றி பெற்ற சுதந்திரம்
புத்தியின்றி இகழ்தல் நியாயமோ
தன்னலம் மறந்த தியாகியை
இன்று ஏளனம் செய்வதோ
புத்தி பேதலித்த மானிடரே
புத்தனின் அகிம்சை நாயகனை
சிந்தையில் இருத்தி வணங்குவீர்
சிந்தனை செய்தே வாழ்த்துவீர் !

கருத்துகள் இல்லை: