எதையும் மறக்கும் மனிதர்
இதையும் மறந்து விடுவரோ
கதைகள் பலவும் பேசியே
பதைக்க வைக்கும் சிலரே
உத்தமர் காந்தி புகழை
கத்தியின்றி பெற்ற சுதந்திரம்
புத்தியின்றி இகழ்தல் நியாயமோ
தன்னலம் மறந்த தியாகியை
இன்று ஏளனம் செய்வதோ
புத்தி பேதலித்த மானிடரே
புத்தனின் அகிம்சை நாயகனை
சிந்தையில் இருத்தி வணங்குவீர்
சிந்தனை செய்தே வாழ்த்துவீர் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக