திங்கள், 31 அக்டோபர், 2022

வருவாயே தோழி

 கூப்பிட்ட குரலுக்கு வருவாயே தோழி

கூப்பாடு போட்டாலும் காணலியே எங்கேநீ
வாசலைப் பார்த்தே கண்கள் பூத்துச்சே
வாசனை மறந்தே நாட்களும் பலவாச்சே
வரேன்னு சொல்லிப் போனவளே மறந்தாயோ
இரவுகள் நீண்டது நினைவுகள் பெருகியே
இரக்கம் இல்லாத மனமேனோ உனக்கு
போனவழி தேடிப் பயணம் செல்லவோ
போகாத ஊருக்கு வழியறிவர் எவரோ
காற்றோடு சேர்ந்து கலந்து வருவாயோ
காக்க வைத்தே வேடிக்கை பார்ப்பாயோ
சொல்லடி இன்றேனும் உன்வரவை காத்திருக்கேன்
சொல்வேன் நற்செய்தி நண்பனுக்கு இனிதாக

கருத்துகள் இல்லை: