கூப்பிட்ட குரலுக்கு வருவாயே தோழி
கூப்பாடு போட்டாலும் காணலியே எங்கேநீ
வாசலைப் பார்த்தே கண்கள் பூத்துச்சே
வாசனை மறந்தே நாட்களும் பலவாச்சே
வரேன்னு சொல்லிப் போனவளே மறந்தாயோ
இரக்கம் இல்லாத மனமேனோ உனக்கு
போனவழி தேடிப் பயணம் செல்லவோ
போகாத ஊருக்கு வழியறிவர் எவரோ
காற்றோடு சேர்ந்து கலந்து வருவாயோ
காக்க வைத்தே வேடிக்கை பார்ப்பாயோ
சொல்லடி இன்றேனும் உன்வரவை காத்திருக்கேன்
சொல்வேன் நற்செய்தி நண்பனுக்கு இனிதாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக