திங்கள், 31 அக்டோபர், 2022

நீயும் நானும்

 வில் தேடிப் போன விசயன் காட்டினிலே

சொல் தேடிப் போன இவனோ நாட்டினிலே
நல் வார்த்தை நாலாய் இருக்கட்டுமே என
பல் தேய்த்த பின்னே பாட்டு எழுத
கல் தேய்ந்து போனது போல் கவிதையது
காலம் உருண்டு ஓட காலன் வருமுன்னே
ஞாலம் இதிலே நட்போடே இருக்க எண்ணி
நாளும் நீயும் நானும் கவிதை பாட
மூளும் தீயது மனதில் முட்டிப் பார்க்கும்
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி எனில்
ஆகும் நட்பும் ஆலம் விழுது போல்
கேட்ட உனக்கு சில வரிகள் சிந்தனையில்
பாட்டு என்றே பாடி வைத்தேன் புலவரே!

கருத்துகள் இல்லை: