எத்தனை வரிகள் எண்ணற்ற பாடல்கள்
அத்தனை சொற்கள் ஆழமான அர்த்தங்கள்
பாட்டிலே பொருளுண்டு பண்ணிசை சேரும்போது
ஏட்டிலே எழுதியதை எவர்வாயோ அசைபோடும்
நாட்டிலே நடப்பதும் நானிலம் முழவதும்
காட்டிலே விலங்குகள் குரல்களின் வேற்றுமைகள்
கடலின் அலைகள் காற்றின் சீற்றம்
உடலின் உயிரின் வேதனைகள் எனவும்
பாட்டாலே பாடிவைத்து போனவரே பலகவிஞர்
கேட்டாலே கண்களிலே கண்ணீரும் வருவதுண்டு
இசையோடு சேர்ந்த இனிய பாடல்களும்
இன்றல்ல என்றென்றும் மனமதை குளிரச்செய்யும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக