திங்கள், 31 அக்டோபர், 2022

பல கவிஞர்

 எத்தனை வரிகள் எண்ணற்ற பாடல்கள்

அத்தனை சொற்கள் ஆழமான அர்த்தங்கள்
பாட்டிலே பொருளுண்டு பண்ணிசை சேரும்போது
ஏட்டிலே எழுதியதை எவர்வாயோ அசைபோடும்
நாட்டிலே நடப்பதும் நானிலம் முழவதும்
கூட்டிலே பறவைகள் குஞ்சுகளைக் கொஞ்சலும்
காட்டிலே விலங்குகள் குரல்களின் வேற்றுமைகள்
கடலின் அலைகள் காற்றின் சீற்றம்
உடலின் உயிரின் வேதனைகள் எனவும்
பாட்டாலே பாடிவைத்து போனவரே பலகவிஞர்
கேட்டாலே கண்களிலே கண்ணீரும் வருவதுண்டு
இசையோடு சேர்ந்த இனிய பாடல்களும்
இன்றல்ல என்றென்றும் மனமதை குளிரச்செய்யும்

கருத்துகள் இல்லை: