திங்கள், 31 அக்டோபர், 2022

வாழ்க்கை என்பதே திரைக் காவியம்

இதுவும் கடந்து போகும் நாட்களும்
எதுவும் மனதில் நில்லா மறையும்
கனவுகள் கலைந்து மறந்து போகும்
மனமது சுழற்சி வேகத்தில் உழலும்
மேடும் பள்ளமும் வளைவும் நெளிவும்
கூடும் பிரியும் உறவும் என்றும்
இன்பமும் துன்பமும் இனியதும் கசப்பும்
இல்லறம் என்பதே இறைவனின் கூற்று
கற்றலும் கேட்டலும் காண்பதும் அறிவே
உற்றவர் பெற்றவர் உறுதுணை உடன்வரும்
எண்ணற்ற நாடகம் எழுதாத வசனங்கள்
கண்மூடி திறக்க காட்சி மாற்றங்கள்
வற்றாத நதியாய் வறண்ட பாலையாய்
பற்றும் பாசமும் துறந்து ஒருநாளும்
வாழ்க்கை என்பதே திரைக் காவியம்
வேடிக்கை எதுவும் நிரந்தரம் இல்லை

கருத்துகள் இல்லை: