இதுவும் கடந்து போகும் நாட்களும்
எதுவும் மனதில் நில்லா மறையும்
கனவுகள் கலைந்து மறந்து போகும்
மனமது சுழற்சி வேகத்தில் உழலும்
மேடும் பள்ளமும் வளைவும் நெளிவும்
இன்பமும் துன்பமும் இனியதும் கசப்பும்
இல்லறம் என்பதே இறைவனின் கூற்று
கற்றலும் கேட்டலும் காண்பதும் அறிவே
உற்றவர் பெற்றவர் உறுதுணை உடன்வரும்
எண்ணற்ற நாடகம் எழுதாத வசனங்கள்
கண்மூடி திறக்க காட்சி மாற்றங்கள்
வற்றாத நதியாய் வறண்ட பாலையாய்
பற்றும் பாசமும் துறந்து ஒருநாளும்
வாழ்க்கை என்பதே திரைக் காவியம்
வேடிக்கை எதுவும் நிரந்தரம் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக