திங்கள், 31 அக்டோபர், 2022

என்னைத் தந்தவளே

 என்னைத் தந்தவளே எங்கேநீ சென்றாயோ

உன்னைத் தேடிநிதம் ஊரெல்லாம் சுற்றிவந்தேன்
தன்னந் தனியானேன் தவிக்கவிட்டுப் போனாயே
பின்னமொரு பிறவியுண்டேல் பிள்ளையாய் மீண்டுமாவேன்
கன்னத்தில் கண்ணீரோடு காலம்பல போச்சு
மின்னல் போல்வந்து மறைந்து போனாயே
உன்னைப் போலொரு தாயவளைக் காண்பேனோ
என்னவெலாம் அனுபவித்து எனைவிட்டுச் சென்றாயே
அன்னையென அழைக்க யாருமில்லை இன்று
அன்னையர் தினமாம் ஆண்டொரு நாளாம்
என்ன கொடுமையிது ஒருநாள் மட்டுமா
என்னில் உறைந்தவளே எனது தெய்வமே
என்றென்றும் உன்நினைவே காத்திடும் கடவுள்நீ !

கருத்துகள் இல்லை: