வேட்டையாடு மிருகமுண்டு உனக்குள்ளே பலவகை
காட்டுப் பன்றி முதல் குரங்குவரை
கானகத்து விலங்கினமோ பசித்தாலே கொல்லும்
காட்டுப் பயல்நீயோ காரணமின்றி கொல்வாய்
பாட்டிலே ஏட்டிலே பாடம் படித்தாயே
கூடி வாழ்ந்தாலே கோடி நன்மையென்று
கூடாது நட்பு பொல்லாங்கு செய்வாரோடு
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
நன்றதனை மறந்து நாடகம் ஆடுவதேன்
மனித இனமென்று வாழ்வதற்கு வழிதேடு
புனித எண்னங்கள் மனதில் நிறையட்டும்
ஆடிய ஆட்டமெலாம் ஆறடிநிலம் வரையே
ஆடுவதை நிறுத்தி அமைதிக்கு வழிதேடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக