வெள்ளி, 8 மே, 2026
கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலா
( 10/10 & 11/10/25)
ஆலப்புழா காலை சிற்றுண்டி ஆப்பம் கடலைக் கறியோடு ஆரம்பித்தது. ஒன்பது மணிக்கு சிக்காரா படகு தயாராக இருந்தது. வசதியாக இருக்கைகளில் அமர்ந்த பிறகு படகு கடலின் பேக் வாட்டர் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய ஏரியும், உலகளவில் 16 வது மிகப் பெரியதுமான ஏரி என அறியப் பட்டதாக படகோட்டி நண்பர் சொன்னார்.
கம்போடிய மிதக்கும் கிராமத்தை விட மிக அழகானதாக, கரையின் இருமருங்கிலும் அணிவகுத்த வீடுகளின் அழகும் ஏன் உலகின் அழகான இடமென்று இது அறிவிக்கப் படவில்லை எனத் தோன்றியது. கேரள மற்றும் மத்திய அரசு விளம்பரப் படுத்தலாம் என நினைத்தேன். இந்தக் கட்டுரையைப் படிக்கும் யாராவதும் சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிடலாம்.
கண்ணைக் கவரும் இப்பயணத்தை எத்தனை போட்டோக்கள் எடுத்தாலும் பத்தாது. மூன்று மணி நேரப் பயணம் முடிந்து, படகுப் போட்டிகளும், ஓணம் பண்டிகையின் போது இங்கே நடைபெறுகின்றன என படகோட்டி நண்பர் சொன்னார்.
ஆலப்புழாவின் Rosh inn owner அவரது ஹோம் ஸ்டே புரமோஷன் செய்வதற்கு உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அவரிடம் விடை பெற்று, வர்க்கலா நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம்.
மலைகளின் வளைவுகளில் மீண்டும் பயணம். மதிய உணவு, தேநீர் இடைவேளை முடிந்து பயணம் தொடர்ந்தது. ஐந்தரை மணிக்கு, முன்பே புக் செய்த ஹோம் ஸ்டேவில் லக்கேஜ்களை இறக்கி, Freshen up ஆகி Sun Set பார்க்க விரைந்தோம். மேகங்களின் மறைவில் சூரியன் ஒளிந்து கொண்டு கண் சிமிட்டினான். போட்டோக்கள் எடுத்த பிறகு கடை வீதியில் நடந்த போது, நண்பர்கள்இரண்டு பேர், மற்றும் நான், Foot massage செல்ல முடிவெடுத்து பாதி வழியில் திரும்பி, மசாஜ் பார்லருக்குச் சென்றோம். ஆளுக்கு அரை மணி நேரம், இரண்டு ஆண்கள் மசாஜ் செய்தனர். நன்றாகவே இருந்தது அன்றிரவு உணவுக்குப் பிறகு நல்ல தூக்கம், கால்களை வெந்நீரில் கழுவிய பிறகு.
மறுநாள் காலை ஹோம் ஸ்டேயிலிருந்து அறைகள் காலி் செய்து, சிற்றுண்டி முடித்து, ஜடாயு பார்க்குக்குப் பயணம். ஒன்பதரைக்கு உள்ளே அனுமதித்தனர். நான் கேபிள் காரில் செல்லவில்லை. நணபர்கள் மட்டும் பயணித்து, பார்வையிட்டு வந்தனர்.
காரின் அருகில் அமர்ந்து அவ்வூரை இரசித்துக் கொண்டுருந்தேன்.
அங்கிருந்து புறப்பட்டு இராஜா இரவி வர்மாவின் ஓவியக் கண்காட்சி, திருவனந்தபுரம் மியூசியம் மற்றும் ஜூவின் இடையே இருந்தது. நுழைவுச் சீட்டு பெற்று, உள்ளே நுழைந்த போது அழகான உயிரோவியங்கள் வெவ்வேறு காலகட்.டத்தில் வரையப்பட்டவை.
மற்ற சிலரின் ஓவியங்களும் பக்கத்து அறையில் பார்வையிட்ட பின் மதிய உணவு இடைவேளை. ஓட்டலில் இருந்து அரை கிமீ் தூரத்தில் உள்ள பத்மநாபபுரம் வடக்கு வாசலுக்குச் சென்று, வேட்டிக்கு மாறி, வெற்று மார்புடன், எங்கள் குழு நண்பரின் தொடர்புள்ள அதிகாரி மூலமாக, கோயிலுக்குள் சென்று, உதவியாளர் ஒருவரின், அனந்த சயன பத்மநாபரின் கால் முதல் தலை வரையிலான விளக்கம் கேட்டு, மூன்று கதவுகளில் கடவுளை எப்படி தரிசிக்க வேண்டுமென்ற தகவலும் தெரிந்து, சன்னிதானத்திற்குள் நுழைந்து, சாமி தரிசனம் முடித்து வெளி வந்து, கன்யாகுமரி நோக்கிப் பயணமானோம். ஓம் ஸடேவில் தங்கி மறுநாள் எட்டு எட்டரை ஸ்லாட்டில் படகில் விவேகானந்தா பாறைக்குச் செல்ல பயணச்சீட்டை ஆன் லைனில் புக் செய்து உறங்கச் சென்றோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக