வெள்ளி, 8 மே, 2026
காரைக்குடி பயணம்
காரைக்குடி பயணம் (2/9/25 to 6/9/25)
காரைக்குடி பங்களாவில் மூன்றாம் நாள். வழக்கம் போல உபசரிப்பு, பல் வகை சிற்றுண்டிகள் என வயிற்றை நிரப்பிய போது, நண்பர் பிரகாஷின் கமெண்ட், என்னுடைய மாமனார் வீட்டில் கூட இப்படி கவனித்ததில்லை என்பது.
முதலில் கோவிலூரில் உள்ள கொற்றலீஸ்வர் சிவன் கோயில். கோயிலில் உள்ள தூண்கள் அனைத்திலும் செதுக் கப்பட்ட சிற்பங்கள், வரிசையான தூண்களில் symmetrical இடது வலது யாளிகள், கண்ணைக் கவர்ந்தன. எதிரே குளத்தில் நீர் நிரம்பி சிலர் குளித்துக் கொண்டிருந்தனர. நடுவே பெரிய மண்டபம் அழகாய் வீற்றிருந்தது.
கோயிலின் எதிரே அருங்காட்சியகம், அதனருகே கைவினைப் பயிற்சிக் கூடம் இரண்டுமிருந்தது. மியூசியத்தில் செட்டி நாட்டினர் பயன்படுத்திய பொருட்கள், அவரது சரித்திரம், ருக்மணி அருண்டேலின் ( பரத நாட்டியப் புகழ்) வாழ்க்கைப் புகைப்படங்கள், கற் சிலைகள், பலவகை குடும்ப விழாக்கள் செய்முறைகள் என ஒரு அகராதி போல் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது.
அடுத்தது ஆத்தங்குடி அரண்மனை கட்டணம் 50₹ செலுத்தி உள்ளே சென்ற போது, கதவு, விசாலமான திண்ணை, திருமண விழாக்கள் போன்றவற்றிற்கு பெரிய கூடம், விருந்து பரிமாறும் கூடம் என பிரமாண்டமாய் வகை வகையான டைல்ஸ், மர வேலைப்பாடு, தூண்கள் அமைப்பு, பெல்ஜியம் கண்ணாடி என அழகாய் பராமரிக்கப் பட்டு இருந்தது.
அடுத்ததாய் செட்டி நாட்டுக்கே உரித்தான தின்பண்டங்கள் செய்யும் வீடு போன்ற பெண் முனைவர் சௌம்யா அவர்களின் குறுதொழில் நிறுவனத்தைப் பார்வையிட்டு, ரவா லட்டு, முறுக்கு, சீடை, தட்டை, மசாலா,சாம்பார் பொடி என அவரவர்க்குத் தேவையானவற்றை வாங்கி முடித்து, விடுதிக்குத் திரும்பி மதிய உணவை முடித்து, அறைக்குத் திரும்பினர் அனைவரும். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சிலர் மட்டும் ஷாப்பிங் போக முடிவானது.
ஐந்து மணியளவில் நீச்சல் குளம் சென்ற போது ஒருவரும் இல்லை. நான் மட்டும் இறங்கி ஆசை தீர ஒரு மணி நேரம் நீச்சல் செய்து முடித்த போது நண்பர் பிரகாஷ் வந்து போட்டோ எடுத்து, அறைக்குத் திரும்பி, பங்களாவின் கடைசி இரவு உணவும் , தூக்கமும் எனக்கூறி அடுத்த நாள் பயணத்திற்குத் தயாராகினோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக