வெள்ளி, 8 மே, 2026
ஓய்வறியா நேரங்கள்
வாழும் வழி தேடி ஓடிக் கொண்டே ஒருவன்
பாழும் பணம் தேடி ஓடிக் கொண்டே ஒருவன்
ஓய்வு எவனுக்கும் இல்லை காலம் முடியும் வரை
தேய்வது தேகம் தேடுவது பொருள் யாரோ உயர்ந்தவர்
பதவி மோகம் பழியும் கூட பாவம் இல்லை
உதவும் கரங்கள் உள்ளம் வெள்ளை நல்ல மனிதம்
இரண்டும் ஓய்வறி் யாது எனினும் சிறந்தது எதுவோ
வளங்கள் போற்றி வசதிகள் செய்து வாழும் தலைவன்
வஞ்சனை செய்து தலைமை ஏற்று பாதகம் செயபவன்
ஓயாது உழைப் பினும் உத்தமன் எவனோ இருவரில்
ஆணவக் கொலையை அஞ்சாது செய்து அரக்கன் ஒருவன்
ஆணோடு பெண்ணை சேர்த்து வைக்கும் உயரிய பண்பினன்
ஒன்றே குலமென்ற உன்னத வாக்கை காக்கும் மனிதன்
நன்று இருவரில் நல்லவன் எவனோ யாவரும் அறிவீர்
நேரங்கள் அனைவர்க்கும் ஒன்றே ஆயினும் வேற்றுமை செயலால்
நேர்மை வழியதே நல்லது ஆகும் நானிலம் போற்றும் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக