வெள்ளி, 8 மே, 2026
பறந்து போனவளே
பாரத்த இறக்கி வக்க தோளத் தான் தேடினேன்
பாராத்தா நீ இல்லே எங்கே தான் போனாயோ
பாவிமவன் சோக மெல்லாம் பாட்டாலே சொல்லி புட்டேன்
பாரா முகமா பரி தவிக்க விட்டு போனாயோ
கண்ண மூடினாலே காணு றது உன் முகமே
கண்ண மூடு முன்னே கண்ணே நீ வருவாயோ
கழனிச் சேறுலே களத்து மேட்டுலே காதலிச்ச நாளெல்லாம்
பழசாப் போச்சுதா பறந்து போனவளே பாவமா இல்லையா
கஞ்சிய குடிச்சாலும் கவளச் சோறு தின்னாலும் பொண்ணே
மிஞ்சி இருக்கும் உன் நினைவே எஞ்சி இருப்பது
உன் நினைவே எத்தனை நாள் காத்திருப் பேன்
பொன் விளையற பூமி பாதம் பட்ட இடம்
காலம் போன பின்னே வந்தா குத்த மடி
காத்த கண்ணும் பூத்துப் போச்சு தடி ஆத்தா
போன வழி சொல்லு விரைவா நான் வாரேன்
போதும் காத்த தெல்லாம் ஓடியே நான் வாரேன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக