வெள்ளி, 8 மே, 2026
காலைப் போதினிலே
வரி யொன்றை எழுதி கவிதை பாட
விரி கின்ற கற்பனை ஊற்றோ. பெருகி
தரு கின்ற அழகே பெருமை அன்றோ
வரு கின்ற சந்தம் வகையாய் அமைய
பெரு கின்ற இன்பம் சொல்லி மாளாது
சிற கொன்றை விரித்து பறவை பறக்க
சிலை யொன்றை. சிற்பி வடிவு அமைக்க
கலை என்று சொல்ல எத்தனை வகைகள்
வலை ஒன்றில் மீன்கள் சிக்கியது போலவே
வார்த் தைகள் கோர்வை கவிதையின் உருவிலே
இசை யோடு சேர்ந்த பாடலாய் மாறியே.
இன்ப மூட்டும் காலைப் போதினிலே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக