வெள்ளி, 8 மே, 2026

தண்ணீர்

உயிர் மூச்சு உள்ள வரை வேண்டும் உனது ஓட்டம் நின்றால் நிற்கும் உலகம் காற்றைப் போலவே இதயத் துடிப்பு நீயாகும் போற்றிப் பாடிட என்றும் மறவோம் யாமும் ஆவியாய் உயர்ந்து குளிர்ந்து உருவான மழலை ஆனதொரு வெண் பனிக் கட்டி உருவம் மலையில் உருவாகி கல்லை மணலாக்கி வருவாய் அலையை உருவாக்கி அருகில் வந்து மறைவாய் குளிர்ந்த வெண் பஞ்சாய் அருவி நீராய் குடங்கள் நிரப்பி கொதிக்கும் வெப்பத்தில் நீயாய் கோபம் கொண்ட நீயோ வெள்ளக் காடாய் கோலம் பல கொள்வாய் நடன நங்கையாய் எல்லாம் நீயே நீயின்றி அமையாது உலகு என்றும் உனைப் போற்றி வணங்கி மகிழ்வோம்

கருத்துகள் இல்லை: