வெள்ளி, 8 மே, 2026
தண்ணீர்
உயிர் மூச்சு உள்ள வரை வேண்டும்
உனது ஓட்டம் நின்றால் நிற்கும் உலகம்
காற்றைப் போலவே இதயத் துடிப்பு நீயாகும்
போற்றிப் பாடிட என்றும் மறவோம் யாமும்
ஆவியாய் உயர்ந்து குளிர்ந்து உருவான மழலை
ஆனதொரு வெண் பனிக் கட்டி உருவம்
மலையில் உருவாகி கல்லை மணலாக்கி வருவாய்
அலையை உருவாக்கி அருகில் வந்து மறைவாய்
குளிர்ந்த வெண் பஞ்சாய் அருவி நீராய்
குடங்கள் நிரப்பி கொதிக்கும் வெப்பத்தில் நீயாய்
கோபம் கொண்ட நீயோ வெள்ளக் காடாய்
கோலம் பல கொள்வாய் நடன நங்கையாய்
எல்லாம் நீயே நீயின்றி அமையாது உலகு
என்றும் உனைப் போற்றி வணங்கி மகிழ்வோம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக