வெள்ளி, 8 மே, 2026

நல்லவர் அவரா

சொல்லுங்கள் கடவுளர் பெயரால் கொழுக்கும் சிலரே நல்லவர் அவரா நல்லது மட்டுமே செய்தாரா சொகுசான வாழ்க்கை சொர்க்கமாய் வசதிகள் எவ்வாறு வர்க்கப் பிரிவுகள் உண்டு வழிபடும் வகையில் எளிமையற்ற எகத்தாளம் பேச்சில் எத்தனை கர்வம் களிநடனம் புரிந்தே கடல் கடந்து போவார் காசுக்காய் இவரோ கடவுளைத் தொழுவரோ வினாக்கள் மாசற்ற வாழ்வும் இல்லாமல் போனதால் ஏமாற்றம் மக்கள் இவரால் மயக்கம் கொள்வதும் ஏனோ? விடைகள் தெரிந்தால் சொல்வீரா பெரியோரே உண்மையில்

கருத்துகள் இல்லை: