வெள்ளி, 8 மே, 2026
யார் மீது கோபம்
என் மீது கோபம் உன் மீது கோபம்
அவர் மீது கோபம் எவர் மீதும் கோபம்
நெற்றிக் கண் வேண்டும் எரிக்க
சுற்றிப் பார் கொடுமை நாட்டில்
கோபம் பெரிதாய் இருந்தென்ன செய்ய
கோவில் தெய்வம் கும்பிட்டும் என்ன
மனிதன் மாறாத குணமொன்று உண்டே
புனிதம் எதுவென்று அறியாத மடமை
குற்றம் புரிந்து கூட்டம் ஒன்று
குள்ள நரியாய் செயல்கள் செய்ய
பார்த்தே இருக்கும் அமைதி நன்றா
பாதகம் செய்வோரை மிதித்தல் ஆகாதா
கோபம் கொள்ளவே மறந்தே போனதா
கோளாறு மனதில் எதனால் நண்பா
தர்ம நியாயங்கள் பந்தாடும் கூட்டம்
தனதாக்கி அனைத்தும் தாண்டவம் ஆடுது
மௌனமே மொழியாய் இருப்பதும் ஏனோ
மனமதில் ரௌத்திரம் மறந்து போனதோ
வேடிக்கை மனிதர்கள் ஏளனம் பேசியே
வாடிக்கையாக வாதமும் செய்வதே தினமும்
விடிவில்லா இரவாய் இருண்டு போனதே
முடிவைத் தேடியே எங்கே போவது
அடிமைத் தனமாய் அடங்கியே வாழ்வதா
குடிமக்கள் யாவரும் உறங்கிப் போயினரோ
விழித்தெழு இன்றே இருளை விலக்கி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக