வெள்ளி, 8 மே, 2026

யார் மீது கோபம்

என் மீது கோபம் உன் மீது கோபம் அவர் மீது கோபம் எவர் மீதும் கோபம் நெற்றிக் கண் வேண்டும் எரிக்க சுற்றிப் பார் கொடுமை நாட்டில் கோபம் பெரிதாய் இருந்தென்ன செய்ய கோவில் தெய்வம் கும்பிட்டும் என்ன மனிதன் மாறாத குணமொன்று உண்டே புனிதம் எதுவென்று அறியாத மடமை குற்றம் புரிந்து கூட்டம் ஒன்று குள்ள நரியாய் செயல்கள் செய்ய பார்த்தே இருக்கும் அமைதி நன்றா பாதகம் செய்வோரை மிதித்தல் ஆகாதா கோபம் கொள்ளவே மறந்தே போனதா கோளாறு மனதில் எதனால் நண்பா தர்ம நியாயங்கள் பந்தாடும் கூட்டம் தனதாக்கி அனைத்தும் தாண்டவம் ஆடுது மௌனமே மொழியாய் இருப்பதும் ஏனோ மனமதில் ரௌத்திரம் மறந்து போனதோ வேடிக்கை மனிதர்கள் ஏளனம் பேசியே வாடிக்கையாக வாதமும் செய்வதே தினமும் விடிவில்லா இரவாய் இருண்டு போனதே முடிவைத் தேடியே எங்கே போவது அடிமைத் தனமாய் அடங்கியே வாழ்வதா குடிமக்கள் யாவரும் உறங்கிப் போயினரோ விழித்தெழு இன்றே இருளை விலக்கி

கருத்துகள் இல்லை: