பாரதி என்றொரு கவிஞன்
பாரத மண்ணின் மைந்தன்
வீரம் ஊட்டிய வரிகள்
வீறு கொண்டே எழும்
சாதிகள் சாடிய புலமை
மோதியே மிதிக்கும் கோபம்
அச்சம் தவிர்க்கும் ஆண்மை
அடங்க மறுத்த மேன்மை
ஆயிரம் வேண்டும் இன்று
ஆணவப் பேய்கள் ஒழிக்க
ஆனந்த சுதந்திரம் வேண்டும்
ஆகையால் வருவாயா மீண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக