வெள்ளி, 8 மே, 2026

தொடும் தூரத்தில் கனவு

விரல்கள் நீண்டு தொடும் தூரத்தில் விலகிப் போனது கனவு விதையூன்றி நீர் பாய்ச்ச விருட்சமான நினைவுகள் கனவாய்ப் பெருகின புதியதோர் உலகம் தேடிப் புறப்பட்ட இரவுத் தேரின் பவனி புலர்ந்திடும் காலைப் போதில் விளங்கா மலே விலகிப் போனது தொட்டு விடத் துடித்த மனது துவண்டு போனது விட்டுப் போனவளின் விரல்கள் தொடாமலே சென்றவள் கனவால் ஒருநாள் தூரத்துப் பனிமலை சிகரம் ஒன்றில் உயரே என் உருவம் தூக்கம் துறந்து விழிக்கும் நேரம் தொலைந்து போனது ஏனோ ? எல்லைகள் அற்ற உலகம் எங்கும் செல்ல அனுமதி உண்டு எங்கும் அமைதி ஆனந்த வாழ்வில் மக்கள் கூட்டம் இனிதாய் மதங்கள் மொழிகள் சாதிப் பிரிவுகள் இல்லா அமைதிப பூங்கா வாதங்கள் வளர்ச்சிப் பாதைகள் பற்றியே வேற்றுமை அற்ற சமுதாயம் காணக் கண் கோடி வேண்டும் காட்சிகள் அழகாய் எங்கும் கானல் நீராய்ப் போனது கண் விழித்த நேரம் அந்தோ தொட்டு விடும் தூரத்தில் கனவு கலைந்து போனது ஏனோ ?

கருத்துகள் இல்லை: